La lecture à portée de main
Vous pourrez modifier la taille du texte de cet ouvrage
Découvre YouScribe en t'inscrivant gratuitement
Je m'inscrisDécouvre YouScribe en t'inscrivant gratuitement
Je m'inscrisVous pourrez modifier la taille du texte de cet ouvrage
Description
Informations
Publié par | Diamond Books |
Date de parution | 01 juin 2020 |
Nombre de lectures | 0 |
EAN13 | 9789352781843 |
Langue | English |
Informations légales : prix de location à la page 0,0166€. Cette information est donnée uniquement à titre indicatif conformément à la législation en vigueur.
Extrait
சாணக்ய நீதி
(நீதிநெறி பற்றிய சாணக்யரின் பழமொழிகள்)
B.K. சதுர்வேதி
டைமண்ட் புத்தகத்தார்
© Publisher
ISBN: 978-93-5278-184-3 Publisher : Diamond Pocket Books (P) Ltd. X-30, Okhla Industrial Area, Phase-II New Delhi-110020 Phone : 011-40712200 E-mail : ebooks@dpb.in Website : www.diamondbook.in Edition : 2017
C HANAKYA N EETI - T AMIL
முன்னுரை
சாணக்கியர் ஒர் சகாப்தத்தை உருவாக்கும் ஆளுமை படைத்தவர் அவருடைய காலத்தில் தான் இந்தியா அறியாமை என்னும் இருளிலிருந்து படிப்படியாக வெளியே வந்தது. பழைய கொள்கைகள் வழுவிழந்து புதிய எண்ணங்கள் உருவாக துவங்கின. அது சமுதாயத்தின் இணைக்கும் சக்தியாக இருந்த தர்மம் முரணாக விளக்கத்துக்கு ஆளாணது. அடிப்படை வாதம் மதசம்பிரதாயங்களிளும் புகுந்து தலை தூக்கி ஆடியது. இந்த குழப்பத்தை பயன்படுத்தி மாமன்னன் அலெக்சாண்டர் எல்லைக்கருகே இருந்த சில சுயலநமான அரசர்களுடன் சேர்ந்து இந்தியா மீது படையெடுத்தான். சாணக்யர் ஒரு அன்னியனின் படையெடுப்பால் நிகழ்ந்த பயங்கரமான அதிர்ச்சியை உணர்ந்தார். இதற்கு முன் இந்தியா மீது படையெடுத்தவர்கள் இறுதியில் இந்தியாவிலேயே குடியேறினர். ஆனால் அவரது தீடிர் தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சி இந்தியாவில் இருந்த குழப்பமான நிலையை அழிக்க உதவியாக இருந்தது. இதனால் துரிதமாக ஒரு புதிய நடைமுறை உருவானது. அந்த புதிய மாற்றத்திற்க்கு சாணக்கியர் ஒரு வழி காட்டியாக இருந்தார்.
சாணக்யர் பழங்காலத்தில் தேச பக்தியை மக்கள் மனதில் விதைத்த முதல் மனிதராக இருந்தார். மக்கள் அவர்களது விசுவாசத்தை தாய் நாட்டிற்கு ராஜயம் காட்ட வேண்டும் என்ற கொள்கையை வகுத்தார். முன் கூறப்பட்ட கருத்துக்கு மாறாக தேசத்தின் நன்மையே மிக உயர்ந்ததாக அவர் கருதினார்.
சர்வ வல்லமை படைத்த மத போதகர்கள் இல்லாத காரணத்தால் தவறான நம்பிக்கைகள் வளர்ந்து சமூகத்தின் தார்மீக நெறியை அழித்துக் கொண்டிருந்தது என்பதை சாணக்கியர் உணர்ந்தார். அமைப்பு முறையில் முழு தான மாற்றத்தையும் சீரமைப்பையும் உருவாக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். ஆனால் வழிகாட்டும் சக்தியாக யாரும் இல்லாத காரணத்தால் மக்களுக்கு இந்த புதிய அமைப்பு முறையை விளக்க முடியவில்லை. இதன் பிறகு அவர் அர்தசாஸ்திரம் மற்றும் நடைமுறை வாழ்க்கையை பற்றி அவரது எண்ணங்களின் தொகுப்பான சாணக்கிய நீதி என்று இரண்டு புத்தகங்களை எழுதினார்.
அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள் மனதில் நடைமுறை அறிவை விதைக்க கூடிய சக்தியாகவும் இருந்தது. அவரது இந்த போதனைகள் மிகவும் அடிப்படையாகவும் எக்காலத்திற்கும் உசிதமானதாகவும் இருக்கிறது. தெளிவான எண்ணங்களுடன் எளிமையான மொழியில் எழுதப்பட்ட இந்த கருத்துக்கள் காலத்தால் அழியாதவை. அவரது பல கருத்துக்கள் இன்றும் மேற்கோள் காட்டப்பட்டு நவீன காலத்துக்கும் அவரது கருத்துக்கள் பொறுந்தும் என்பதை காட்டுகிறது. இந்த கருத்துகளின் அடிப்படையை விளக்க அதை தற்காலக் கருத்துகளுடன் ஒப்பிட்டுள்ளோம். சில கருத்துக்கள் மிகவும் சுருக்கமாக இருப்பதால் அதற்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சாணக்கியர் முன் கூறிய கருத்துக்கு காட்டுகிறது. இந்த கருத்துகளின் அடிப்படையை விளக்க அதை தற்கால கருத்துகளுடன் ஒப்பிட்டுள்ளோம். சில கருத்துக்கள் மிகவும் சுருக்கமாக இருப்பதால் அதற்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சாணக்கியர் முன் கூறிய கருத்துக்கு முரணான கருத்துக்களை கூறியுள்ளார். இது அடிப்படை உண்மையை விளக்க அவர் எடுத்த முயற்சியாக இருக்கலாம். சில இடங்களில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் நெறியற்றவைகளாக உள்ளன. ஆனால் அவை முதல் பார்வைக்குதான் அவ்வாறு தெரிகிறது. ஆழமாக அதன் அர்த்தத்தை நாம் உணர்ந்தால் அதன் உண்மையான விளக்கத்தை நாம் அறியலாம். முிற உயிரினங்களிடமிருந்து கீழ்கண்டவாறு கூறுகிறார்.
“ப்ரத்துத்தானாம் ச்ச யுத்தம் ச்ச சம்விபாகாஷ் ச்ச புந்துஷூ”
அதாவது சேவலிடமிருந்து நாம் நான்கு விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். காலையில் நம் சகோதரர்களை ஓடச்செய்து விட்டு அவர்களின் பங்கையும் நாம் எடுத்துக்கொள்வது. இந்த கருத்து நெறியற்றதாக தெரிந்தாலும் இது இயற்கை நமக்கு அளித்த அடிப்படை உணர்வாக சுற பாதுகாப்பை கற்றுக்கொடுக்கிறது. இதே முறையில் தான் சில நெறியற்ற கருத்துக்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சாணக்கியரை பற்றி அவர் சூதான திட்டங்கள் வகுத்து எந்த நிலைமையையும் திறமையாக அவரது சுலோகங்கள் இந்த கருத்துக்கு மாறாக உள்ளன. அவை சாணக்கியரை ஒரு மிருதுவான கற்பனை வளம் மிக்க கவிஞனாகவும் காட்டுகின்றன என அவர் கூறுகிறார்.
“பந்தனானி கல் சந்தி பஹினி ப்ரேம ரஜ்ஜீ க்ரித் பந்தன்மன்யத் தாருபெத் நிபுயோனி –ஷதான்க்ரி நிஷ்க்ரியோ பவதி பங்கஜ் கோஷே”
இதன் பொருள் பல வீதமான பந்தங்கள் உண்டு ஆணால் காதல் என்ற பந்தம் மிகவும் வித்தியாசமானது. கடினமான மரத்தையே துளையிடக்கூடிய கருந்தேனி தாமரை மலரின் மென்மையான இதழ்களால் சிறைபிடிக்கப்படுகிறது இவ்வாறான கவிதையை எழுதிய ஒருவர் அவர் எழுதிய சில பழமொழிகள் சிலருக்கு ஆட்சோபம் அளக்கும் கருத்தாக இருக்கலாம். குறிப்பாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள் இந்த கருத்துக்களை ஆட்சேபிக்கலாம். சாணக்கியர் அவரது காலத்தில் வயாந்திருந்த கருத்தை பகிர்ந்து கொள்ளார். ஆவர் கூறும் கருத்துகள் இன்றும் நம் சமூதாயத்தின் சில பிரிவுகளில் நடைமுறையில் உள்ளன. இந்து மதத்தில் இரண்டாவது அவர்கள் போகப் பொருள். அவர்கள் ஆண்களுக்கு வாழ்கைத்துனையாக இருப்பவர்கள் என்ற மேலை நாட்டு கருத்து நம் நாட்டில் இல்லை. இந்த உலகில் யாரும் உன்னதமானவர்கள் இல்லை. மிகவும் உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதர்களிடம் கூட ஏதாவது ஒரு குறை இருக்கும். ஒரு மனிதன் வாழும் சமூகத்தில் உருவாக்கப்படுகிறான். சாணக்கியர் இந்த சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கப்படுட்டாலும் அவரால் சில முரண்பாடான கருத்துக்களிலிருந்து விடுபட முடியவில்லை.
இந்த சிறிய குறைபாடுகளை நீக்கிவிட்டால் சாணக்கியரது போதனைகள் (மிகவும் அருமையானவை. அவரது எழுத்து நடைமுறை மற்றுமல்லாமல் அவரது போதனைகள் அளித்த நல்ல முடிவுகளும் இதனை நமக்கு காட்டுகின்றன. சாணக்கியர் தனது போதனைகளை கற்பித்ததோடு மட்டுமல்லாமல் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.
சரித்திர பதிவுகளில் நமக்கு தெரிவது என்ன வென்றால் சாணக்கியரது போதனைகள் முலம் சாதரண மனிதனாக இருந்த சந்தி குப்த மௌரியரை ஒரு பேரரசனாக மாற்றியது மட்டுமல்லாமல் மக்களிடம் தேச பக்தி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அது வரை மக்கள் தன் இராஜ்ஜியம் என்று பிரிந்து கிடந்தனர். அவர் ஏற்படுத்திய மாற்றத்திற்கு சாட்சியாக இந்தியா மீது சமூக மற்றும் அரசியல் விதிமுறைகள் ஜனநாயகத்தை கருவாக கொண்டது. சாணக்கியர் உயர்ந்தப் கொள்கை காலப்போக்கில் மிக முக்கியதுவம் வாய்ந்த தாக மேம்பட்டுள்ளது.
இந்த புத்தக்தில் உபயோகித்துள்ள உரைநடை சென்ற நூற்றாண்டில் பூனாவில் வெளியிடப்பட்ட உரையிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகத்தின் பழைமையை காக்கும் எந்த இடை கணிப்பும் இல்லாது இருக்க மிகவும் கவனமாக இந்த உரை எழுதப்பட்டிருந்தாலும் இதில் சில கருத்துக்கள் விளக்கத்தில் மாறுதல்கள் இருக்கலாம். இந்த புத்தக்த்தில் நாங்கள் மிகவும் அடிப்படையான பழமொழிகள் மற்றும் அனைவருக்கும் பொருந்தும் கருத்துக்கள் கூறும் இந்த முத்தான சந்தர்பத்தை வழங்கிய திரு.
B.K. சதுர்வேதி
பொருளடக்கம்
முன்னுரை
தனிநபர்
சமூகம்
சத் சங்கம்
பொது நோக்கு
இதர கருத்துக்கள்
சாணக்கிய சூத்திரங்கள்
1. தனிநபர்
சாணக்கிய நீதியின் அடிப்படை நோக்கம் வாழ்வின் ஒவ்வொரு நடைமுறை அம்சத்தின் அவை போதிப்பதாகும். அந்த வகையில் அவர் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு காரணிகளை, தனி மனித நோக்கின் படி தொட்டுள்ளர்.
செல்வம், உட்டம், வாழ்க்கை, உடல் யாவும் மாயை மற்றும் நிலையற்றது, தர்மம் மட்டுமே நிலையானதும் நிலைத்து நிற்பதுமாகும்.
*
கடவுளின் இருப்பிடம் மரம், கல், மண் இவற்றால் ஆன விக்ரஹங்கள் இல்லை. அவர் உணர்வுகளில் வசிக்கிறார்.
*
ஆனால் ஒருவர் உலோகம், மரம், கல், இவற்றால் ஆன கடவுள் விக்ரஹங்களை நம்பி முழு பக்தியுடன் தொழுதல் அவருக்கு விரும்பிய பலன் கிடைக்கும்.
*
கோபம் சாவாகும். காமம் (நரகின் நதி) வைதாரணி, அறிவு காமதேனு பசு மற்றும் திருப்தி (கடவுளின் தோட்டம்) நந்தவனம்.
இறைவணக்கம் (Prayer)
प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम्। नाना शास्त्रेद्धतं वक्ष्ये राजनीति समुच्चयम्॥ 1 ॥
Pranammya Shirsaa Vishnum Trailokyaadhipatim Prabhum. Naanaa Shaastreddhatam Vakshye Rajneeti Samuchchyam .
மூவுலகின் முதல்வானன விஷ்ணுவை வணங்குகிறேன். இப்போது பல்வேறு பிராதான களஞ்சியங்களில் கூறப்பட்ட ராஜநிதி கோட்பாடுகளை விவரிக்க தொடங்குகிறேன்.
धर्मेतत्परता मुखे मधुरता दाने समुत्साहता मित्रेऽवञ्चकता गुरौ विनयता चितेऽपि गम्भरता। आचरे शुचिता गुणे रिसकता शास्त्रेषु विज्ञातृता रूपे सुन्दरता शिवे भनता त्वय्यस्ति भो राघव॥ 2 ॥
Dharme Tattpartaa Mukhe Madhurtaa Daane Samuttsaahataa Mittreavanchakataa Guru Vinyataa Chitteapi Gambharataa. Aachare Shuchitaa Gune Risaktaa Shaastreshu Vigyatritaa Roope Sundartaa Shive Bhantaa Tvayasti Bho Raaghav.
நம்பிக்கையில் பக்தி, பேச்சில் இனிமை, ஈகையில் தாராளம், நட்பில் நிஷ்கபடம், குருவிடம் பணிவு, குணத்தில் ஆழம், பக்தி, திறமையில் மதிப்பு, கிரந்தங்களில் ஆழ்ந்த அறிவு, தோற்றத்தில் பொலிவு, சிவ நம்பிக்கை (அல்லது அனைத்து உயிர் நலம் பேணல் ஆகியவையே ஓ ராகவா (கடவுள் ராமன்) உனது குணாதிசயம்!
काष्ठं कल्पतरू: सुमेरूरचलश्चिन्तामणि: प्रस्तर: सूर्यस्तीव्रकर: शशि: क्षयक निरवारिधि:। कामो नष्टतनुर्बलिर्दितिसुतो नित्य पशु: कामगो: नैतास्ते तुलयामि भो रघपते कस्योपभा दीयते॥ 3 ॥
Kaashtham Kalpataruh Sumerurachalashinintaamanih
Prashtarah Sooryasteevrakarah Shashih Kshayak Nirvaaridhih. Kaamo Nashtatanurba lirditishuto Nittya Prashuh Kaamagoh Naittaaste Tulayaami Bho Raghapate Kassyopabhaa Deeyate.
கல்பதரு (எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஓரு தெய்வீக மரம்) மரத்தால் ஆனது. சுமேரு ஓரு குன்று, தத்துவ ஞானியின் கல் ஒரு கல்மட்டுமே கதிரவன் கதிர்கள் எரிக்கக் கூடியவை, நிலவு வளர்வது தேய்வது.
கடல் (நீர்) உப்பு காப்பது, காமதேவன் (காதற் கடவுள்) உடலற்றவன், பாலி என்பது ஒரு பூதம், அனைத்தும் தரும் காமதேனு ஓரு பசு ஓ ராமா! உன்னை யாருடன் ஓப்பிட இயலாது (அதாவது சிறந்த குணாதியங்கள் கொண்ட ஓவ்வொன்றிலும் ஏதாவது ஓரு உள்ளார்ந்த குறை இருக்கும்) நீ ஓப்பில்லாதவன்.
का चिन्ता मम जीवने यदि हरिर्विश्वम्भरो गीयते नो चेदर्भकजीवनार्थ जनीस्तन्यं कुथं नि:सरेत्। इत्यालोच्य मुहुर्महुर्यदु पते लक्ष्मीपते केवलं त्वत्पादाम्बुजसेवनेने सततं कालो मया नीयते॥ 4 ॥
Kaa Chintaa Mam Jeevane Yadi Harirvishvambharo geeyate No Chedarbhakjeevanaarth Jananeestannyam Kutham Nihsaret. Ittyaalochaya Muhurmuhuryadu Pate Laxmipate Kevalam Tvattapaadaambujsevanen Satatam Kaalo Mayaa Neeyate.
உலகை காக்க பகவான் ஹரி இருக்கும் போது நான் எதற்காக வாழ்வை எண்ணி கலங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தன் குழந்தைக்காக ஒரு தாயின் தனங்கள் தானாகவே பால் நிறைந்து காணப்படுவது எங்கனம்? இதை நம்பி (உயிர்களை உருவாக்குபவன் எவனோ அவனே அதை காக்க வல்லவன்) ஓ லமியிர் மணாளனே! என் வாழ்வை உன் பாதங்களில் சமர்பிக்கிறேன்.
இறைவன் (God)
5. पुष्पे गन्ध्र तिले तैलं काष्ठे वह्रि: पयोघृतम्।
इक्षो गुड़ं तथादेहे पश्यात्मानं विवेकत:॥ 5 ॥
Pushpe Gandham Tile Tailam Kaashthe Vahannih Payoghritam. Ikshau Gudam Tathaa Dehe Pashyaattmanam Vivekatah.
இறைவன் நம் உடலில் வசிக்கிறான், உயிர் மலர்களில் மணமாக உள்ளது. என்னை விதைகளில் எண்ணையாகவும், விறகில் நெருப்பாகவும், பாலில் நெய்யாகவும், கரும்பில் வெல்லமாகவும் உள்ளது. புத்திமான்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
न देवो विद्यते काष्ठे न पाषाणे न मृण्मये। भावे ही विद्यते देवस्तस्माद भावो ही करणाम् ॥ 6 ॥
Na Devo Viddyate Kaashthe Na Paashaane Na